*காரைக்குடியில் துவக்கினர்
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோ.வேலங்குடியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன்கள் பாண்டித்துரை (30), கார்த்திகேயன் (27). இருவரும் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான வழித்தடத்தில், 22 மாநிலங்களில் உள்ள 501 வழிபாட்டு தலங்களை தரிசித்து உலக சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முடிவு செய்தனர்.
இதற்காக நூறு நாட்களில் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை தங்களது காரில் கடந்து பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்பயணத்தை நேற்று காலை சகோதரர்கள் இருவரும் தங்களது ஊரிலிருந்து கார் மூலம் துவக்கினர். இந்த ஆன்மீக பயணத்தை கலெக்டர் ஜெயகாந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.